உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜீப்பும் காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் பெத்ரா மாதவ் கிராமத்தைச் சேர்ந்த சுர்ஜித் தனது ஜீப்பை மெஹ்மூதாபாத் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்மூதாபாத் பகுதியில் ஜீப் சென்றபோது, எதிரே வந்த காரும் ஜீப்பும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுர்ஜித் யாதவ்(24), அஜித்குமார் சிங்(35), கம்லா(13) மற்றும் சீமா சிங்(35) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதைஅறிந்த சிதாபூரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் ஆர்.பி.சிங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சிதாபூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.